இத்திட்டம் எதற்கு?
- இந்த திட்டம் வருவதற்கு முன்பு இந்தியாவில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கு இல்லாதவர்களாக இருந்தனர்.
- ஒரு குடிமகன் நிதி ஆற்றல் பெறுவதற்கு வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் என்பது அடிப்படை உரிமை ஆகும்.
- குடிமக்கள் நிதி ஆற்றல் பெறுதல் என்பது, அரசாங்கத்திடமிருந்து நேரடியாக அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு குடிமக்களுக்கு உதவும் (கடன்கள் & இதர சலுகைகள் உட்பட). இதனால் அனைத்து இடைத்தரகர்களின் ஊழல்கள் தவிர்க்கப்படும்.
இத்திட்டத்தின் பலன்கள்:
- ஏழை மக்கள் வளர்ச்சியடைவதற்கு & அவர்களின் நிதிநிலைமை சீரடைவதற்கு உதவும்;
- வைப்புத் தொகைக்கு உரிய வட்டி
- ரூ.1.00 லட்சம் விபத்து காப்பீடு
- இருப்புத்தொகை வைத்திருக்க தேவையில்லா கணக்கு
- இந்தியா முழுவதும் எளிதாக பணம் அனுப்பலாம்
- அரசாங்க திட்டங்களில் பயன்பெறுபவர்கள், இந்த கணக்குகளில் நேரடியாக பயன் மாற்றம் செய்யப் பெறுவார்கள்
- ஓய்வூதியம், காப்பீடு திட்டங்களை பெறும் வசதி
- ஒரு வீட்டுக்கு ஒரு கணக்கிற்கு மட்டும், முன்னுரிமையாக வீட்டு இல்லத்தரசிக்கு ரூ.5000/- வரை வங்கி இருப்புக்கு மேல் அதிகப்பணம் (மிகைப்பற்று) எடுக்கும் வசதி
- 2017 மார்ச்-ல் உள்ளபடி இந்தியா முழுவதிலுமிருந்து இந்த திட்டத்திலிருந்து மொத்தம் 28+ கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர் (தமிழ்நாட்டில் 88.66 லட்சம்)
இத்திட்டத்தில் எப்படி சேர்வது :
- ஆதார் அட்டை / ஆதார் எண் இருக்குமானால், வேறு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. முகவரி மாறியிருக்குமானால், நடப்பு முகவரி குறித்த ஒரு சுய உறுதிச்சான்றிதழ் போதுமானதாகும்
- ஆதார் அட்டை இல்லையெனில், பின்வரும் அதிகாரபூர்வ செல்லத்தக்க ஆவணங்களில் (OVD) ஏதாவது ஒன்று தேவைப்படும்
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட் & NREGA அட்டை. இந்த ஆவணங்களில் உங்கள் முகவரி அடங்கியிருக்குமானால், இது அடையாள மற்றும் முகவரிக்கு ஆதாரமாக கருதப்படும்.
உரியவாறு உறுதிச்சான்றளிக்கப்பட்ட நபரின் நிழற்படத்துடன் அரசிதழ் பதிவுபெற்ற ஒரு அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதம்.
நீங்கள் அணுக வேண்டிய வங்கிகளின் பட்டியல் :
அனைத்து பொதுத்துறை வங்கிகள் & தனியார் துறை வங்கிகள்
மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in