இத்திட்டம் எதற்கு?

  • ப்ரீ – மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் அளவில் கல்வி உதவித்தொகை வழங்குவது என்பது, பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புமாறு சிறுபான்மை பிரிவு சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் ஊக்குவிக்கச் செய்வதுடன், பள்ளிக் கல்வி மீதான அவர்களுடைய நிதிச் சுமையை குறைக்கும்.
  • இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றான கல்வி மூலம் ஆற்றல் பெறச் செய்தலுக்கு, சிறுபான்மை சமுதாயத்தினரின் சமூக – பொருளாதார நிலைகளை மேம்படுத்திட வழிவகுக்கும் ஆற்றல் திறன் உள்ளது.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகள்) அவர்களுடைய கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாநில அரசுகள் மூலம் மத்திய அரசால் மாணவர்களுக்கு 100 சதவிகிதம் நிதியுதவி வழங்கப்படும்.
  • பெண் குழந்தை கல்விக்கு 30 சதவிகித ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர்வது எப்படி?

  • ஓராண்டுக்கு (போஸ்ட் மெட்ரிக்) 2 லட்சத்திற்கு மற்றும் 1 லட்சம் (ப்ரீமெட்ரிக்) மேற்படாமல் குடும்ப வருமானம் உள்ள முந்தைய இறுதி தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்ணுக்கு குறையாமல் அல்லது அதற்கு சரிநிகரான கிரேடு பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும். scholarships.gov.in (ப்ரி மெட்ரிக் மே 1 ம் தேதி முதல் ஜுலை 31ம் தேதி வரை மற்றும் போஸ்ட் மெட்ரிக் ஜுன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை)
  • தேவையான ஆவணங்களின் பட்டியல் – மாணவர் நிழற்படம், நிறுவன சரிபார்ப்பு படிவம், வருமானச் சான்றிதழ், மாணவர் உறுதிமொழி, மதச் சான்றிதழ், மதிப்பெண் அட்டை, நடப்பு படிப்பு ஆண்டின் கட்டண ரசீது, குடியிருப்பு சான்றிதழ்.

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in